;
Athirady Tamil News

கால்களற்ற சிறுத்தையின் உடலம் மீட்பு!!

0

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை தோட்டத்தின் தேயிலை மலையொன்றிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (1) காலை மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து பற்கள், தோல், நான்கு கால்கள் என்பனவும் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மிருக வேட்டையில் ஈடுபடும் சிலர் தேயிலைத் தோட்டங்களில் பொறிகளை வைப்பதாகவும் இதில் சிறுத்தைகளும் சிக்கி உயிரிழப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனத் தெரிவித்துள்ள பொகவந்தலாவை பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.