;
Athirady Tamil News

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள்!!

0

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முயற்சித்த சம்பவம் தோல்வியடைந்துள்ளது.

தெமட்டகொட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு மோட்டார் சைக்கிளை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தினார்.

இதேவேளை, உரிய தவணைகள் செலுத்தப்பட்ட நிலையிலும் நிதி நிறுவன அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.