;
Athirady Tamil News

பாலக்காடு அருகே காட்டு யானை மிதித்து பழங்குடியின தொழிலாளி பலி..!!

0

பாலக்காடு அருகே அட்டப்பாடி சோலையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). தொழிலாளி. இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது காட்டு யானை ஒன்று அவரை விரட்டியது. பின்னர் அந்த யானை லட்சுமணனை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் யானையை விரட்டிவிட்டு லட்சுமணனை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அட்டப்பாடி சோலையூர் பகுதியில் யானை தாக்கி பலியான 4-வது நபர் இவர் ஆவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.