;
Athirady Tamil News

பாலைநிலம் திரைக்கு வந்தது.!! (படங்கள்)

0

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டது.

படம் திரையிடல் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் , மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் , உறுப்பினர் , திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

ஜூட் சுகியின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் தாயக மண் வாசனையுடன் உருவாகியுள்ள “பாலைநிலம்” திரைப்படம் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30, மதியம் 2.30 மற்றும் இரவு 6.30 காட்சிகளாக திரையிடப்படவுள்ளன.

“பாலை நிலம்” திரைப்படத்தில் ரத்னகாந்தன், அபர்ணா, ராஜா மகேந்திரசிங்கம், மகாலிங்கம், விமல் ரோய், ஷாஜா, லச்சா, விமலரூபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்தத்திரைப்படத்திற்கான இசை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை. படத்தொகுப்பு நிவேன், கிராபிக்ஸ் தங்கவேல் சிவநேசன் மேற்கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.