;
Athirady Tamil News

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் !!

0

புலத்கோபிடியவில் உள்ள ஹரங்கஹாகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயதுடைய முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து கிராமசேவகருக்கு அறிவிக்கப்பட்டு சோதனையிடப்பட்டதில் வீட்டிலிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் ​தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரடைப்பால் முதியவர் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.