;
Athirady Tamil News

நிதி வசதிகளை பெற இலங்கைக்கு அங்கீகாரம்!!

0

பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கும் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்கும் உதவி செய்வது தொடர்பில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண நிதி வசதிகளை பெறுவதற்கான இலங்கையின் தகுதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் உப தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட கடன் வழங்கும் தரப்பினருடன் நேற்று ஜனாதிபதி கொழும்பில் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பலதரப்பு நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உதவித் திட்டம் இலங்கைக்கு தேவை என இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.