;
Athirady Tamil News

தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு !

0

உடுகம பிரதேசத்தில் சிலரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு வெளியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதன்போது, உயிரிழந்தவரின் மனைவி, குழந்தை மற்றும் தாய் வீட்டில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, தாக்கப்பட்ட நபரை உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்க அயலவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த கொடூர தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.