;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை! – பா.கஜதீபன்!!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யார் பிரிந்து சென்றாலும் கூட்டமைப்பாக நாம் தொடர்ந்து செயல்படுவோம் என தெரிவித்த புளொட்டின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாக செல்வதை நாம் விரும்பவில்லை என்றார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(12) நடந்தது.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிக ஆசனத்தை பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்து போட்டியிடுவது தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் விடயங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஊடகங்கள் ஊடாகவே இந்த செய்தியை நாம் அறிந்திருந்தோம்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் இது பற்றி எங்களுடன் இது குறித்து பேசவில்லை. இது தொடர்பில் அவர்கள் முடிவெடுத்த பின்னர் நாம் இதை பற்றி விரிவாக ஆராய முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.