;
Athirady Tamil News

நல்ல நிர்வாக வாரம்: 53 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு..!!

0

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் ‘நல்ல நிர்வாக வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் குறைதீர்ப்பு, அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி, 2-வது நல்ல நிர்வாக வாரம் கடந்த 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. ‘கிராமத்தை நோக்கி நிர்வாகம்’ என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில், 53.8 லட்சம் பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. அரசு சேவை தொடர்பான 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.