;
Athirady Tamil News

லிப்டில் அத்துமீறிய வாலிபரை தாக்கி நிலைகுலைய வைத்த பெண்..!!

0

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பொது இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி தன்னிடம் அத்துமீறிய வாலிபரை பெண் ஒருவர் தாக்கி நிலைகுலைய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிப்டில் பெண் ஒருவர் தனியாக பயணம் செய்கிறார். அதே லிப்டுக்குள் வாலிபர் ஒருவரும் நின்று கொண்டிருக்கிறார். பெண் தனியாக நிற்பதை அறிந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு லிப்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். தனது அருகில் வாலிபர் வருவதால் அந்த பெண் சற்று தள்ளி நிற்கிறார். ஆனால் அந்த வாலிபரோ பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க மீண்டும் நெருங்கினார். இதனால் அந்த பெண் திடீரென்று வாலிபரின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். அத்துடன் நிற்காமல் அந்த நபரின் மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார். இதில் அந்த வாலிபர் அப்படியே நிலை குலைந்தார். இந்த சம்பவம் லிப்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. 31 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் தைரியத்தையும் பாராட்டி உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.