;
Athirady Tamil News

கட்டுப்படுத்தப்பட்ட இந்திய அத்துமீறல் – முல்லைத்தீவில் பிடிபட்ட பெருமளவு இறால்கள்!

0

பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடித் தொழில் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பெருந் தொகையான இறால் பிடிபட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமது இடங்களுக்கு அழைத்துச் சென்று, பிடிக்கப்பட்ட இறால்களை காண்பித்த கடற்றொழிலாளர்கள், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தியமைக்காக தமது நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினரை மாத்திரம் நம்பி இருக்காமல், கடற்றொழிலாளர்களும் அதுதொடர்பாக கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.