;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய வன்முறைக்குழு – வாள்களுடன் அட்டகாசம் !!

0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பாரதி வீதியிலுள்ள வீடொன்றின் மீதும், அச்சுவேலி தென்மூலையிலுள்ள உந்துருளி திருத்தும் நிலையத்தின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு பேர் வாள்கள் சகிதம் இந்த தாக்குதல்களை சில மணி நேரத்துக்குள் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தனிமையிலிருந்த மூதாட்டியின் வீட்டுக் கண்ணாடிகளை அவர்கள் அடித்து உடைத்து, படலையையும் கொத்தி சேதப்படுத்தி, பெட்ரோல் குண்டையும் வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த குழுவினர், உந்துருளி திருத்தும் நிலையத்துக்குள் புகுந்து, அங்கு நின்ற உந்துருளி ஒன்றையும் வாள்களால் கொத்தி சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.