;
Athirady Tamil News

வீட்டுக்கிருத்தியத்திற்கு சென்றவர்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு!!

0

வீட்டுக்கிருத்திய நிகழ்வுக்கு வருகை தந்தோருக்கு , உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பெண்ணொருவர் கடந்த மாதம் முதலாம் திகதி காலமானார். அவரின் வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது , வீட்டுக்கிருத்திய நிகழ்வுக்கு சென்ற உற்றார் , உறவினர்கள் நண்பர்களுக்கு வீட்டாரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வீட்டுக் கிருத்திய நிகழ்வுகளில் ,மரக்கன்றுகள் , கல்வெட்டுக்கள் , எவர் சில்வர் பொருட்கள் உள்ளிட்டவையே நினைவாக வழங்கப்படும் , நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுக் கிருத்தியத்திற்கு வந்தவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.