;
Athirady Tamil News

கொரோனாவால் இறந்த மனைவிக்கு சிலை வைத்த ஒய்வுபெற்ற அரசு ஊழியர்!!

0

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியை சேர்ந்தவர் தாபஸ் (வயது 65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி இந்திராணி. கணவன் மனைவி இருவரும் மாயாபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள கிருஷ்ணர் சிலையை கண்ட இந்திராணி தன்னுடைய இறப்பிற்கு பிறகு இதே போல் தன்னுடைய உருவ சிலையை செய்ய வேண்டும் என கணவரிடம் தெரிவித்து இருந்தார். இந்திராணி கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மே 4-ந் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தாபஸ் அவரது சிலிக்கான் சிலையை செய்வதற்காக ஆன்லைனில் பல்வேறு சிற்பிகளை தேடி பார்த்தார். அவர் தேடிச் சென்ற சிற்பிகள் அனைவரும் மகாத்மா காந்தி, அமிதாப்பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டவர்களின் மெழுகு சிலையை காண்பித்தனர். ஆனால் தாபஸ் தனது மனைவியின் சிலை சிலிக்கானால் வடிவமைக்க வேண்டும் என எண்ணினார்.

இதையடுத்து சுபிமல் தாஸ் என்ற சிற்பி சிலிக்கான் சிலையை செய்ய ஒப்புக்கொண்டார். 30 கிலோ எடையில் ரூ.2.50 லட்சம் செலவில் இந்திராணியின் சிலிக்கான் சிலை உருவாக்கப்பட்டது. வடிவமைக்கப்பட்ட இந்திராணியின் சிலை தாபஸ் வீட்டு வராண்டாவில் சோபாவில் உட்கார்ந்து உள்ளது போல் நிறுவி உள்ளார்.

இதனை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து தாபஸ் கூறுகையில்:-இந்த சிலை என் மனைவி என்னுடன் எப்போதும் இருக்கிறாள் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.