;
Athirady Tamil News

முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

0

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் விஜிமருதன், மதகுருமார், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.