;
Athirady Tamil News

யாழ் போதனாவைத்தியசாலை 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !! (PHOTOS)

0

2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு , தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.

நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, பிரதிப் பணிப்பாளர் மு.யமுனானந்தா, வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.