;
Athirady Tamil News

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது!! (PHOTOS)

0

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீரழிவு கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான இன்சுலின் மருந்து பொருட்கள் கோண்டாவில் அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

மிகவும் விலை உயர்ந்த இன்சுலின் மருந்து என்பதால் அரச வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்படுவதில்லை இதன் காரணமாக பொதுமக்களின் பங்களிப்புடன்வழங்கப்படும் நிலையில் அறக்கட்டளை நிலையத்தினரால் இன்று இன்சுலின் மருந்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் ராஜேஸ்வரி அறக்கட்ட நிலையத்தின் தலைவர் மற்றும் யாழ்ப்பாண நீரிழிவு கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.