;
Athirady Tamil News

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்!!

0

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்-ன் கார், கடந்த மாதம் 30ம் தேதி டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் ரூர்க்கி எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். காயமடைந்த ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ரிஷப் பந்த் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.