;
Athirady Tamil News

13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !!

0

பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 18ஆம் திகதி வரை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர இன்று உத்தரவிட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனராத்ன மற்றும் அவரது மகனை தாக்கி, அவர்களது வீட்டை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த 13 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.