;
Athirady Tamil News

ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடு – விக்கி, கூட்டமைப்பை புறக்கணிக்க கோரிக்கை !!

0

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலளார் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நோக்காது, ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடாக இதனைக் கருதி வாக்களிக்க வேண்டும் எனக் கோரினார்.

அதேநேரம், சி.வி.விக்னேஸ்வரனையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் மக்கள் இந்த தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.