;
Athirady Tamil News

உமி மூடைக்குள் கசிப்பு கடத்திய குற்றத்தில் மூவர் யாழ். பொலிஸாரினால் கைது!!

0

உமி மூடைக்குள் கசிப்பு கடத்தி வந்த மூவர் புதன்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நெல் உடைத்த உமி மூடைக்குள் கசிப்பினை மறைத்து கடத்தி வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திக்கு அருகில் பேருந்தினை மறித்து பொலிஸார் சோதனையிட்ட போது கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து உமி மூடையினை கொண்டு வந்த மூவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் உமி மூடைகளையும் சான்று பொருட்களாக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.