;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் மார்கழி விழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் மார்கழி விழா இன்றையதினம்(06) இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் காலை 10மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இ.தர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவ மாணவிகளின் கலைநிகழ்வுகள், கதாபிரசங்கங்கள் இடம்பெற்றதுடன் திருவெம்பாவையை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கே.சுதாகர், உயர் பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி கண்ணதாசன், இந்துகற்கைகள் பீட பீடாதிபதி பத்மநாபன், இந்துகற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி சுகந்தினி ஸ்ரீ முரளிதரன், ரில்கோ விடுதி உரிமையாளர் திலகராஜ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.