;
Athirady Tamil News

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா!!

0

இந்தியா முழுவதும் நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது.

இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பால் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2 கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,30,718 ஆக உயர்ந்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.