;
Athirady Tamil News

பெலகாவி அருகே இந்து அமைப்பின் தலைவர் மீது துப்பாக்கி சூடு!!

0

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ஹிண்டலகா கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோகிடகேரா. இவர் ஸ்ரீராம் சேனாவின் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். நேற்று சனிக்கிழமை மாலை ரவி கோகிடகேரா, டிரைவர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வாகனம் மீது மற்றொரு வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் திடீரென ரவி கோகிட்கர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ரவி கோகிட கேராவின் தாடியில் ஒரு தோட்டா பாய்ந்து டிரைவரின் கையில் பட்டது. வலியால் அலறிய அவர் உடனே காரை நிறுத்தினார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பெலகாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஓட்டுநரின் கையில் தோட்டா கண்டெடுக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்து ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.