;
Athirady Tamil News

2 பல்கேரிய பிரஜைகள், பொலிஸ் ஓஐசி கைது!!

0

ஏரிஎம் இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேகத்தன்ன பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பல்கேரிய பிரஜைகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவ, பத்தேகம, காலி, கராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச வங்கிகளின் ஏரிஎம்களில் இருந்து 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டன.

அதில், கணினியை ஊடுருவி பெருந்தொகையான பணத்தை கொள்ளையிடுவதில் வெளிநாட்டவர்கள் இருவர் ஈடுபட்டுள்ளமை குறித்து, கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் கார், பணம் கொள்ளையிடப்பட்ட இடங்களுக்கு சென்றதாக தகவல் வெளியானதுடன், அவர் பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கல்கிசை மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.