;
Athirady Tamil News

தனிப்பட்ட விஷயங்களை மீடியாக்களுக்கு கசிய விட்டார் இங்கிலாந்து அரசி மீது ஹாரி குற்றச்சாட்டு!!

0

இங்கிலாந்து அரசி கமீலா தனிப்பட்ட விஷயங்களை மீடியாக்களுக்கு கசியவிட்டார் என இளவரசர் ஹாரி பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2 வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் நடிகை மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது பற்று இல்லாமல் ஹாரி-மேகன் இருந்தனர். இதனால் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

இளவரசர் ஹாரி ஸ்பேர் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு ஹாரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இங்கிலாந்து அரசி கமிலா பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்காக நாங்கள் விவாதித்த தனிப்பட்ட விஷயங்களை மீடியாக்களுக்கு கசிய விட்டார். கலப்பின பெண்ணான மேகனுக்கு பிறக்கும் குழந்தை என்ன நிறத்தில் இருக்கும் என்று கவலையில் அரச குடும்பத்தினர் இருந்தனர். இது போன்ற விஷயங்கள் மேகனுக்கு கவலையை ஏற்படுத்தியது’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.