;
Athirady Tamil News

விமான நிலையத்தில் உயிரை விட்ட பயணி!!

0

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (10) அதிகாலை விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய இந்த பயணி இலங்கையின் பெத்தகான பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரும் அவரது தாயாரும் இன்று அதிகாலை 02.18 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QRR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதிகாலை 03.50 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது, ​​பயணியின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.