;
Athirady Tamil News

ஐ.தே.கவுடன் நூறு வீதம் ஒத்துப்போகவில்லை!!

0

ஐக்கிய தேசியக் கட்சியினரின் கொள்கைகள் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் நூறுக்கு நூறு வீதம் ஒத்துப்போகவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனநாயக பாதுகாப்பு தொடர்பில் சிந்தித்து தாம் கட்சி என்ற ரீதியில் இணைந்து செயற்பட தீர்மானம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை நேற்று (10) செலுத்தியபோது சாகர காரியவசம் இதனை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.