;
Athirady Tamil News

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு !!

0

புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.