;
Athirady Tamil News

கொரோனா உறுதி செய்யப்பட்ட 200 வெளிநாட்டு பயணிகளில் பலருக்கு உருமாறிய தொற்று !!

0

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பி.எப்.7 எனப்படும் உருமாறிய கொரோனா கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுவரை பரிசோதிக்கப்பட்ட 15 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளில் சுமார் 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பலருக்கு மேற்படி பி.எப்.7 கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகதாரா மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அதேநேரம் இந்த தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ள அவர், நமது தடுப்பூசிகள் இந்த தொற்றுக்கு எதிராக மிகுந்த பலன் அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.