;
Athirady Tamil News

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தாமதிக்கலாம்!!

0

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை குறித்த திகதியில் அரசாங்கத்திடம் வழங்குவது சாத்தியமில்லை என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள 8,911 உள்ளூராட்சி மன்றத் தொகுதிகள் 4,000 உள்ளூராட்சித் தொகுதிகளாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கொள்கைத் தீர்மானம் எடுத்ததன் பின்னர், மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் பெப்ரவரி 28 ஆம் திகதி எல்லைப் எல்லை நிர்ணய பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நடைமுறைச் சிக்கல்கள் பல காரணமாக அது தாமதமாகும் என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.