;
Athirady Tamil News

கேரளாவில் பள்ளி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!!

0

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தியது. அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பைசல் மேச்சேரி மீது மாணவிகள் 5 பேர் புகார் கூறினர். அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் பைசல் மேச்சேரி மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பைசல் மேச்சேரியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.