;
Athirady Tamil News

அஹுங்கல்லவில் கிளைமோர் வெடிகுண்டு மீட்பு!!

0

அஹுங்கல்ல – வெலிகந்த பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள வாழைமரத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) மாலை குறித்த கிளைமோர் குண்டு மீட்கப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.