;
Athirady Tamil News

கொரோனா விவகாரம்: அமைச்சரின் அறிவிப்பு !!

0

கொரோனா தொற்று தொடர்பான எந்தவோர் அறிக்கையும் சுகாதார அமைச்சிடம் அல்லது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மணி நேரத்தில் பல செய்திகள் வெளியாகியிருந்தாலும்இலங்கையின் கொரோனா நெறிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவுகளில் இருந்து அறிக்கை வெளியாகும் என்றும் இந்த நெறிமுறையை கடைபிடிக்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.