;
Athirady Tamil News

மாவனல்ல இரட்டை படுகொலை: இருவர் கைது!!

0

மாவனல்லை பிரதேசத்தில் இளைஞர்கள் இருவரை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலைச் செய்து புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசங்களில் வைத்தே இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைச் செய்யப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்விரு இளைஞர்களை கொன்று புதைத்த சம்பவத்தில் மாவனல்ல பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வர்த்தகர் என கருதப்படும் நபரையும் அவரது மூன்று தரகர்களையும் கைது செய்ய கேகாலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தரகர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.