;
Athirady Tamil News

இஸ்ரோவின் ‘சுக்ரயான்-1’ திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு? .!!

0

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. இஸ்ரோ முதல் முறையாக வெள்ளி கிரக ஆராய்ச்சிக்காக சுக்ரயான் செயற்கைகோளை அனுப்ப உள்ளது. வெள்ளி கிரகம் 19 மாதங்களுக்கு ஒருமுறை பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அதன் அடிப்படையில் இஸ்ரோவின் வீனஸ்மிஷன், ‘சுக்ரயான்-1’ திட்டம் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக சுக்ரயான் செயற்கைகோள் திட்டம் 2024-ம் ஆண்டு டிசம்பருக்கு தள்ளி போனது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் 2024-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதன் பிறகு திட்டத்தை தொடங்க மேலும் 8 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.

எனவே இந்த திட்டத்தை 2031-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ பேராசிரியரும், விண்வெளி அறிவியல் திட்டத்தின் ஆலோசகருமான ஸ்ரீகுமார் கூறுகையில், வீனஸ்மிஷன் திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறவில்லை. இதன் காரணமாக இந்த திட்டம் 2031-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகளும் வீனஸ் பயணங்களை 2031-ம் ஆண்டுக்கு திட்டமிட்டுள்ளன என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.