;
Athirady Tamil News

யாழில். குழந்தை உயிரிழப்பு!

0

தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர் நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால் , குழந்தையை தாயார் சென்று பார்த்த வேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.