;
Athirady Tamil News

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!

0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது.

இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல சபைகளுக்கும் போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.