;
Athirady Tamil News

துபாய் புள்ளிங்கோ நடத்திய பொங்கல் தின கொண்டாட்டம்- நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்பு!!

0

துபாய் புள்ளிங்கோ நடத்திய தமிழர் திருவிழாவாம் பொங்கல் தின கொண்டாட்டம் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லாம் பார்க் (woodlem Park) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது. காலையில் குத்து விளக்கு ஏற்றி, சர்க்கரை பொங்கல் பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் விழா தொடங்கியது. குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவில் இருந்து வந்த நகைச்சுவை கலைஞர்கள் அறந்தாங்கி நிஷா மற்றும் குரேசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக ரேடியோ கில்லி 106.5 FM உரிமையாளர் கனகராஜ், TEPA நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், அன்வர் குரூப்ஸ் ஆப் கம்பெனியின் நிறுவனர் அன்வர், துபாய் ஈமான் கலாச்சார மையம் பொதுச் செயலாளர் ஹமீது யாசின், TAM குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனர் ஷாநவாஸ், பெருமாள் பிளவர்ஸ் உரிமையாளர், E-2 Energy உரிமையாளர் ராஜா, காரம் சாரம் உணவகத்தின் உரிமையாளர், இத்ரீஸ் ட்ராவல் ஏஜென்சி, கார்ஸ் அரேபியா, கிரீன் குளோபல் முனைவர் ஜாஸ்மின், சல்வா இன்டர்நேஷனல் உரிமையாளர், 7 சிட்டி, அவர் பெஸ்ட் ஃபேர் டிராவல்ஸ், Wardat Al safa உரிமையாளர் வகிதா, செய்தியாளர் அஸ்கர் அலி, எல்லா தமிழ் (Yalla Tamil) ரவுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை துபாய் புள்ளிங்கோ ஆன்ட்ரியா மற்றும் சமீர் தொகுத்து வழங்கினர். துபாய் புள்ளிங்கோ அய்யாஸ், ஷாநவாஸ் மற்றும் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்று நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.