;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேட்புமனு தாக்கல்!!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று (ஜன 21) தமது வேட்புமனு தாக்கல் செய்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு வேட்பு மனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையிலும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா தலைமையிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தலைமையிலும், தமிழர் மகாசபை கட்சி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலும், இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராசாமணிக்கம் சாணக்கியன் தலைமையிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி அருண் தம்பி முத்து தலைமையிலும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, பி டி பி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற கட்சிகளும் இன்று சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தன.

இதேவேளை 10 மேற்பட்ட சுயேட்சை குழுக்களும் இன்று தமது வேட்பு மனுக்களை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தன. மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வீதி தடைகள் போட்டு பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு. பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.