;
Athirady Tamil News

புதிதாக 140 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 3 பேர் பலி!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 131 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 921 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 117 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 228 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,960 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 20 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத்தில் 2 பேர், மேகாலயாவில் ஒருவர் என 3 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,733 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.