;
Athirady Tamil News

அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.