;
Athirady Tamil News

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது!!

0

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிசார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.