;
Athirady Tamil News

நொய்டாவில் 43- வது மாடியில் இருந்து குதித்து வணிக ஆலோசகர் தற்கொலை!!

0

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 175 மீட்டர் உயரம் கொண்ட அடுக்கு மாடிக்கட்டிடம் உள்ளது. நகரிலே யே மிக உயரமான கட்டிடம் இது. இதன் மேல் தளத்தில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி ராணி பாக் என்ற பகுதியை சேர்ந்த 43 வயதான வணிக ஆலோசகர் இந்த கட்டிடத்துக்கு வந்தார்.

பின்னர் அவர் கட்டித்தின் 43 – வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.