;
Athirady Tamil News

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 27-ந் தேதி உள்ளூர் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு!!

0

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பிரதான கோவிலான மலைக்கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு அந்த மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை அரசு ஏற்று, 27-ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறையை அறிவிக்க கலெக்டருக்கு அதிகாரத்தை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.