;
Athirady Tamil News

புங்குடுதீவு சென்சேவியர் கிரிக்கெட் அணி அதிரடி!! (படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு கழகங்களுக்கிடையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வொறியர்ஸ் கழக மைதானத்தில் பத்து ஓவர்கள் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டித்தொடர் இன்று ஆரம்பமானது.

அணித்தலைவர் க. குணாளன் அவர்களின் வழிநடத்தலில் சென்சேவியர் அணி பங்குபற்றிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டியை நோக்கி முன்னேறியுள்ளது.

முதலில் புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் அணியை எதிர்கொண்ட சென்சேவியர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 92 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டபோதிலும் ஐங்கரன் அணி 18 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இரண்டாவது போட்டியில் பாரதி அணியை எதிர்கொண்டு முதலில் துடுப்பெடுத்தாடிய சென்சேவியர் அணி 94 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புங்குடுதீவு பாரதி கழகம் 63 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மூன்றாவது போட்டியில் புங்குடுதீவு நண்பர்கள் கழகத்தினரை எதிர்கொண்ட சென்சேவியர் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி 100 ஓட்டங்களை குவித்து இத்தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த அணியாக அதிரடி காட்டியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நண்பர்கள் கழகத்தினர் 55 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தனர். நாளையதினம் குழு B யில் இடம்பெற்றுள்ள புங்குடுதீவு வொறியஸ், சண்ஸ்ரார், நசரத், ஈஸ்ரன் உள்ளிட்ட விளையாட்டு கழகத்தினர் மோதவுள்ளனர். எதிர்வரும் ஞாயிறன்று புங்குடுதீவு வொறியர்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி இடம்பெறும்.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.