;
Athirady Tamil News

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த 8 பேர் கைது!!

0

புதையல் தோண்டுவதற்கு வேனில் பயணித்துக்கொண்டிருந்த 8 பேர் நேற்று (27) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாரு பிரதேசத்தில் இராணுவ வீரர்களால் போடப்பட்டிருந்த வீதி தடையில் வேன் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது புதையல் தோண்டுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த நிலையில் சந்தேக நபர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மொரட்டுவ, பதவிய, பிலிமத்தலாவ, கல்கிஸ்ஸ, உடபுஸ்ஸல்லாவ, கரந்தெனிய மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.