;
Athirady Tamil News

திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகள் அறுத்து நகை பறிப்பு!!

0

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சுந்தரம் பள்ளி கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 60) கணவரை இழந்த இவர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனியாக இருந்த பாக்கியலட்சுமியின் வீட்டுக்குள் மர்ம கும்பல் திடீரென புகுந்தனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் பாக்கியலட்சுமி அணிந்திருந்த நகைகளை கேட்டனர்.

அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாக்கியலட்சுமி கழுத்தில் கத்தியால் வெட்டினர். மேலும் அவரது 2 காதுகளையும் அறுத்து கம்மலை பறித்தனர். பாக்கியலட்சுமி அணிந்திருந்த செயினையும் கும்பல் பறித்து சென்று விட்டனர். இதனால் படுகாயம் அடைந்த பாக்கியலட்சுமி மயங்கி விழுந்தார். இரவு சுமார் 9 மணிக்கு அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர் .அப்போது பாக்கியலட்சுமி ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கந்திலி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.