;
Athirady Tamil News

நாட்டில் மேலும் 50 கடவுச்சீட்டு பிராந்திய மையங்கள்!!

0

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் தவிர கடவுச்சீட்டு வழங்கும் பணியை மேற்கொள்வதாகவும், கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விண்ணப்பதாரரும் இந்த அலுவலகத்திற்குச் சென்று சுயவிபரம் மற்றும் புகைப்படங்களைக் கொடுத்து, அவர்களது கடவுச்சீட்டை அவர்களின் வீட்டுக்கே வரவழைத்துப் பெற்றுக்கொள்ள முடியும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உரிமையாளரின் சுயவிபரத்தை உள்ளடக்கிய இலத்திரனியல் சிப் கொண்ட இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.