;
Athirady Tamil News

2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!!

0

ஜா-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 2 கிலோ 245 கிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (ஜன 30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொனஹென பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஜாஎல, ஏக்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கிலோ 245 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய பிபில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். சந்தேகநபர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.